Tuesday, November 17, 2020

காண்

 காண்


பலப்பல உயிர்கள்

பல காலொடு எறும்பு

இரு காலொடு சிறு அரும்பு

ஒரு காலொடு கரும்பும்

சிறு காம்பொடு மலரும் 


என்முன்

முக்கண்முன்

தன்நிலையுணரா

கீழோர்

முது ணரா

முதுவர்


எத்துனை உயிர்கள்

துணை இல்லா நிலை இல்லா

நிலையுணர விளை இல்லா


மலரோ கரும்போ ஒருமுறை 

அரும்போ எறும்போ சிலமுறை

ஆதியும் மதியும் பல பலமுறை

என்முன்

முக்கண்முன்


மறைப்பால் மறையுணரா 

கனவாய் காற்றோடு

Monday, November 16, 2020

காண்

 காண் 


மயி லிறகிலுறை நீர் திவலை

செறுக் கொடு 

கீழுறை நீர் சேறாய் காண்


மண்ணோ டுறை நீ 

நிறமி ழந்து சேறாகினாய்

நானிருக்கும் நிலை 

நீயுணர யென்ன தவம் செய்வாய்


நிலமதி லுறை நீர் 

நகைப்புடன்

நித்திலம் தன்னழகை 

யென்றுமுணரா


கணப் பொழுதில்

மயிர் சிலிர்ப்ப மஞ்சையாட

திவலை சேறுடன் கலவிட


பீலிமேல் நின்று நான்

மயிலி னழகை 

காணாமலே போயிருப்பேனே


உடனுறை வதே வதையோ

விலகி காண் நீ தேவதையோ

மயிலே 


நிஜமாய் நிலமெனை 

விழவிடாஎன்றும்

நின்னழகை நானுணர

விலக செய்த இறை


நன்றியு டனே திவலை